பிரியாணி சோத்துக்கு நன்றி

இஜட்.ஜபருல்லாஹ் மாமா ஒரு விருந்தில் கலந்து கொண்டாஹா...

பிரியாணி..
பெரிய பெரிய துண்டு இறைச்சி 
தாழிச்சா
பொறிச்ச கோழி
குருமா
பால்தா..

வயிற தாண்டி 
வாய் வரை நிறைஞ்சிருந்த
சஹன் விருந்து

சாப்பாடு முடிந்ததும்... பாத்திஹா ஓதி அல்லாஹ்க்கு நன்றி சொல்லியிருக்காஹல்வோ...

நாலு பேர்ல ஒருத்தவங்க மட்டும் பாத்திஹா ஓதும் போதே வெளிநடப்பு செஞ்சிருக்காஹா..
அது வேற யாருமல்ல.. நம்ம இஜட் மாமா தான்.

மத்த எல்லாருக்கும் சரி கோவம்..
வந்து கேட்டிருக்காஹல்வோ.. “ஏங்க இப்படி எந்திரிச்சு போயிட்டீங்க... பெரிய பாவம் தானே..” ன்னு.

அதுக்கு இஜட் மாமா சொல்லிருக்காஹா,
’காலைல வெறும் தேத்தணி குடிச்சேன்.. அப்போ நன்றி சொல்லலை..
நாலு இட்லியும் பொதினா சட்னியும் சாப்டேன்... அப்போவும் நன்றி சொல்லலை..
மதியானம் மொலவுதண்ணி சோறு தான் சாப்டேன்.. அப்போவும் நன்றி சொல்லலை..
இப்போ பிரியாணி சோத்துக்கு மட்டும் நன்றி சொன்னாக்கா அல்லாஹ் கோச்சுக்குவான்... அது தான் பெரிய பாவம்’
ன்னு ஒரு போடு போட்டாஹலே பார்க்கலாம்..

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

கொடுத்த காசு வீண் போகலை