மைத்தாங்கொல்லை

எங்க ஊட்ல 'பாத்திமாபீ லாத்தா' தான் சோறாக்கி கறியாக்கி வச்சு கொடுத்துட்டு போவாஹா. அஹலுக்கு சேத்த மரைக்கான், முத்து மரைக்கான் என்று இரண்டு மகன்கள்.

ஒரு நாள் அவர்களால் வீட்டுக்கு வர முடியலை. வராததற்கான காரணத்தை அதாவது அவர்கள் 'பைத்தாங்கொல்லை'  (என்று தான் நினனக்கிறேன், அந்த ஊரின் பேர் எனக்கு மறந்து விட்டது) என்ற ஊருக்கு போக வேண்டியிருந்ததால் தான் வர இயலவில்லை - இந்த மேற்கூறிய காரணத்தை அவர்களின் மகன் முத்து மரைக்கான் மூலமாக எங்க வீட்டுக்கு முறையாக தகவல் சொல்லி அனுப்பினார்கள்.

முத்து மரைக்கான் வந்து எங்க பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம் தகவல் சொன்னான்.

'ம்மா இன்னைக்கு வர மாட்டாஹலாம்.. 'மைத்தாங்கொல்லை'க்கு   போறாஹலாம்.. நாலைக்கு வர்ரேண்டு சொல்ல சொன்னாஹா..' என்று

வீட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டோம்.

எங்க பாட்டியா சிரித்து கொண்டே சொன்னாஹா, 'மைத்தாங்கொல்லைக்கு போனஹ யாருமே திரும்ப வர முடியாதேப்பா..' என்று

அவன் அலட்டிக்காம, 'தெரியலைங்க.. எங்க ம்மா எப்படியும் வந்துடறேன்னு சொல்ல சொன்னாஹா..' என்றான்

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்