Posts

Showing posts from 2008

பள்ளிகூடத்தில்..

பசுமை நிறைந்த பள்ளி பருவங்களை மறக்கத் தான் முடியுமோ?, எங்க ஊரில் பள்ளிகூடத்தில் நடந்த சில கலாட்டாக்கள்... எங்க ஊரு ஆசாமி ஒருவர் (நாந்தான்னு நினைக்கிறேன்) தொப்பி (அதாங்க முஸ்லிம்கள் தொழுகையின் போது அணியும் குல்லா என்றால் விளங்கும் தானே - (அல்லாஹ்வே! தொழுகையின் போது குல்லா அணிய தேவை இல்லை என்று யாராவது ஒரு சகோதரர் ஹதீதை கொண்டு வராமல் இருக்க வேண்டுமே!) - )அணிந்து கொண்டு பள்ளிகூடத்திற்கு போய் விட்டார், ஒரு மாற்று மத சகோதரர், 'நீங்க இப்படி தொப்பி போட்டுட்டு ஸ்கூலுக்கு வர்ரீங்களே?, இப்படி வரக்கூடாது.. இது மத உணர்வை ஏற்படுத்துது" என்று மிகுந்த நல்லெண்ணத்துடன் சொல்லி வைக்க, நம்ம ஊர் ஆசாமி, "அப்ப நீங்க ஏன் திருநீறு பூசிட்டு வர்ரீங்க.. இது மத உணர்வை ஏற்படுத்தாம மத நல்லிணகத்தையா ஏற்படுத்துது..?" என்று ஒரு போடு போட்டாரே பாருங்கள்.. அந்த சகோதரர் கேட்ட அடுத்த கேள்வி என்னான்னு நினைக்கிறீங்க, "இந்த குல்லா எங்க வாங்குனீங்க, நல்லா இருக்கு.." ------------------------------------------------------------------------ ஆண்டவர் தியேட்டரில் ஒரு படம் மாற்றினால் அந்த படத்த

கல்யாண கலாட்டா

ஒரு விபரமும் தெரியாதவர்களை எங்க ஊரில் "பேயன்" என்று மரியாதையாக (?) அழைப்பது வழக்கம். அப்படி ஒருவர் தனக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாகவும் எப்படி எப்படி நடந்துக்கணும் என்றும் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு குரூப்பிடம் தெரிவித்திருக்கிறார். அந்த கொடுமைக்காரர்கள், 'ஓய் ரொம்ப முக்கியம், கையழைச்சு வுட்டவொடனே, பொண்ணுட கைய புடிச்சிட்டு நல்ல சத்தமா மூணாம் கலிமாவ மூணு தடவ ஓதணும்.., அப்புறம் தாலி கட்டு அது இதுன்னு எல்லாம் முடிஞ்சு அறைக்குள்ள பொண்ணு வந்தவொடனே.." என்று நிறுத்தியிருக்கிறார் "சொல்லுங்கணி, பயமா இருக்கு" என்று திட்டுகட்டு போய் கேட்டிருக்கிறார் அந்த மரியாதைக்குறியவர் "அட போங்கணி, இப்ப அஞ்சாம் கலிமாவ அஞ்சு தடவ ஓதணும்.." என்று கூறியிருக்கிறார் "அல்லாஹ்வே.. நான் என்னா செய்வேன், இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது" என்று புலம்ப ஆரம்பித்து இருக்கிறார் "ஏன்?" என்று ஆச்சர்யப்பட்டு கேட்க "எனக்கு மூணாம் கலிமாவும் தெரியாது, அஞ்சாம் கலிமாவும் தெரியாது, கலிமா தெரியலைன்னா கல்யாணம் பண்ண முடியாதுன்னு (இதையே தலைப்பா வச்சிருக

கேள்வியும் பதிலும்

எங்க ஊர்லங்க, ஒழுங்கா பள்ளிவாசலுக்கு தொழுவ போறவன் கூட தப்லீக் ஜமாத் பள்ளிவாசலுக்கு வந்துட்டாஹன்னா, அந்த பள்ளி பக்கமே போவ மாட்டாங்க, என்ன செய்றது?, காலம் அப்படி இருக்கு! இந்த பதிவு தப்லீக் ஜமாத் செய்வது சரியா? தவறா? என்று போலீஸ், வக்கீல் மாதிரி ஆதாரத்தை எடுத்து வைத்து பேசும் பதிவு அல்ல. இந்த பதிவு தப்லீக் ஜமாத்தார்கள் எங்க ஊர்வாசிகளை தொழுகைக்கு அழைத்த போது அவர்களுக்கு கிடைத்த பதில்கள் பற்றியது. ----------------------------------------------------------------- "பள்ளிவாசலுக்கு வாங்க.." "என்ன இப்படி சொல்லிட்டீங்க, நான் தான் கண்டிப்பா வருவேனே" "எப்போ?"" "பெருநாக்கு (ஹி.. ஹி..)" ------------------------------------------------------------------ "பள்ளிவாசலுக்கு வாங்க" "பார்க்கறேன்" "அப்படி சொல்ல கூடாதுங்க, நம்ம மௌத் எப்பன்னு நமக்கு தெரியுமா?" (பதில் சொன்னவர் இப்போது ஹயாத்தோடு இல்லை) "அது எப்டிங்க தெரியும், அது தெரிஞ்சா தான் அவனவன் தன்னையே "அல்லாஹ்"ண்டுடுவானே" "அஸ்தக்பிருல்லாஹ

நாகூர் அம்ஜத்கான்

விக்ரம் படம் நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் ஓடிய போது அம்ஜத் கான் அறிமுகமான காட்சியில் இஹ பேரை சொல்லி தான் தியேட்டர்ல கத்துனான்வோ. இஹ என்று நான் குறிப்பிட்டிருக்கும் அந்த நபர் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும், இ(ஹ)வர்கள் பள்ளிவாசலில் பயான் செய்யும் போது ஒரு சம்பவம் நடந்தது. பொதுவாக இன்னைக்கு பயான்ங்குறது நரகத்த சொல்லி பயமுறுத்துறது இல்லைன்னா சொர்க்கத்துக்கு ஆசை காட்டறது இந்த நிலையோட நின்று விடுகிறது. அப்படி தான் ஒரு முறை ஆவேசமாக, 'தொழுவுனீங்க.. உங்கள "வாங்க வாங்க"ன்னு சொல்லி சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போவாங்க, தொழுவல.. உங்கள "தர தர"ன்னு நரகத்துக்கு இழுத்துட்டு போவாங்க" என்று எச்சரித்ததும், "அப்ப எங்களுக்குல்லாம் "வாங்க வாங்க"வா? இல்ல "தர தர"வா" ண்டு ஒருத்தர் குழப்பத்தோடு கேட்க கோபத்துல நாகூர் அம்ஜத்கான் "தூ"ன்னு காரி துப்பிட்டாஹலாம் அஹலுக்கு "வாங்க வாங்க" கிடைக்கணும்னு இந்த நேரத்துல நான் துவா செஞ்சுக்கிறேன்.

சட்டை புடிக்குதுன்னா என்னா அர்த்தம்

எங்க வாப்பாவும் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களும் ஒன்றாக படித்தவர்கள். நெருங்கிய தோழர்கள். என்றாலும், நான் இஜட். ஜபருல்ல்லாஹ் அவர்களை "தோழாப்பா" என்று அழைத்தது கிடையாது. "ஜபருல்லாஹ் நானா" என்று தான் அழைத்து வந்திருக்கிறேன். எங்க வாப்பா இவர்களின் நகைச்சுவை உணர்வை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். நண்பர் ஒருவருக்காக அவர் வைத்திருந்த துணி கடையில் ஜபருல்லாஹ் நானா அவர்கள் நின்று வியாபாரம் செய்து கொடுப்பது வழக்கம். அப்படி ஒரு முறை கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, ஜபருல்லாஹ் நானா அவர்களிடம் சட்டையை வாங்க வந்த ஒருவர், 'இத போட்டு பாக்கலாமா?" என்று கேட்டிருக்கிறார். "பாருங்களேன்.." என்று சொல்லபட்டிருக்கிறது சட்டையை போட்டு பார்த்திருக்கிறார், உடம்பை இறுக்கி பிடித்து ரொம்ப பி(f)ட்டாக இருந்திருக்கிறது. ஒருவர் சட்டையை இறுக்கமாக போட்டிருந்தால் நாம்,"உடம்ப பி(f)ட்டுனு புடிச்சுகிட்டு இருக்குன்னு" சொல்வது வழக்கம். அவர் உடனே, "புடிக்கிதுங்க.." என்று சொல்லியிருக்கிறார் அதற்கு ஜபருல்லா நானா அவர்கள், "புடிக்கிதுன்னா இதை

சோடா கலர்

கல்யாணம், காது குத்து, சுன்னத் என்றால் அதை வீடியோ எடுப்பார்கள். பொதுவாக எங்கள் ஊரில் எல்லா வீட்டு விசேஷங்களுக்கும் நாகூர் சேத்தான் அவர்கள் தான் வீடியோ பதிவு செய்வார்கள். அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் அவர் பதிவு செய்த காட்சிகள் மட்டுமல்ல சில நகைச்சுவைகளும் நம்மிடையே உள்ளது. அவர்கள் ஒரு முறை நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது இடைவேளையில் ஒருவர் 'சோடா கலர், சோடா கலர்.." என்று திரும்ப திரும்ப கூறி விற்று கொண்டு வந்தார். சேத்தான் நானா அவரை கூப்பிட்டார்கள், 'என்னா நானா?" என்று அவரும் வந்திருக்கிறார். சேத்தான் நானா, "சோடா கலர் இல்லை தம்பி அது வெள்ளை" என்று சொல்லியிருக்கிறார்கள்.

வெளியூரா..?

அறிமுகம் இல்லாத ஒருவரை நம் ஊரில் பார்த்து பேசினோம் என்றால் பெரும்பாலும் முதல் கேள்வியாக "நீங்க வெளியூரா..?" என்ற கேள்வி தான் அமையும். 'ஆமாங்க எப்படி கண்டுபுடிச்சீங்க..?" என்று தொடர்ந்து பதிலாக வரும் கேள்விக்கு, "முழிக்கிற முழியை வச்சு தான்" என்று இன்னொரு பதிலை சொல்லி பே முழி முழிக்க வைப்பார்கள். இது பொதுவாக எல்லா ஊரிலும் நடக்கிறது தான். எங்க ஊர் வாசி வெளியூர் போய் படித்து விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். சரியான பஜர் நேரம் அது. தெரு முனையில் இருந்த கடையில் பெட்டியுடன் தேத்தணி வாங்கி குடித்து கொண்டிருந்த அவரிடம் கடைகாரர், "வெளியூரா..?" என்று கேட்டதற்கு, 'என்னது, வெளியூறா? நான் உள்ளூர் தாங்க" என்று பாய்ந்திருக்கிறார் - அதாவது கேட்டவருக்கு இவரை ஊர் வாசி என்று நன்றாகவே தெரியும், இவர் கேட்டது "வெளியூருக்கு போறீங்களா?" அல்லது "வெளியூரிலிருந்து வருகிறீர்களா?" என்று அர்த்தத்தில். ஆனால் நம்மவர் அதை தவறாக புரிந்து கொண்டுவிட்டார்.

பராட்டா உருண்டை

குஞ்சாலி மரைக்காயர் தெரு முனையில் சின்னதா ஒரு அடுப்பு வச்சு அதுல பொறிக்கன் சட்டிய வச்சு மைதா மாவ உருண்ட புடிச்சு சட்டில போட்டு பொறிச்சு சுடச்சுட காட்சி தரும் பதார்த்தத்தை கிட்டதட்ட நாகூரில் இருக்கும் எல்லா நாவுமே ருசி பார்த்திருக்கும். பரோட்டா உருண்டய பத்தி தெரியாதஹலே இருக்க முடியாது. எங்க மாமி ஒருத்தர் அவரிடம் பணிபுரியும் ஒரு நபரிடம் "கடக்கி போய் பராட்ட உருண்ட 10ரூவாய்க்கி வாங்கிட்டு வாரும்" என்று சொல்ல - அவர் மியா தெரு முனைக்கி போய் தஸ்தகீர் பாய் கடையில போய் பராட்டா ரொட்டி சுடுறதுக்கு முன்னாடி உருண்ட புடிச்சி வச்சிருப்பாஹல்ல அந்த பராட்டா உருண்டய காட்டி, 'பராட்டா உருண்ட 10 ரூவாய்க்கி தாங்க" என்று கேட்டிருக்கிறார். கடயில இருக்குறஹ கொழம்பி போய் 'ஓய் என்னாங்கணி சொல்றீயோம், இந்த உருண்டய யாருமே கேக்க மாட்டாஹலேங்கனி' என்று சொன்னதற்கு, "இது தான் கேட்டாஹா, நான் தான் காசு தர்ரேன்ல, நீங்க கேக்குறத கொடுக்க வேண்டியது தானே" என்று நல்லவிதமாக எடுத்து சொல்லியிருக்கிறார். நமக்கு ஏன் வம்புன்னு அதே உருண்டையை பையில அடைச்சு கடைகாரர்கள் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

குழந்தையின் வயது

குரான் ஓதி கொடுக்கும் சாபு ஒருவர் வாஞ்சூர் (நாகூரின் எல்லையில் இருக்கும் பாண்டிச்சேரி மாகாணத்தை சேர்ந்த ஊர், டாஸ்மார்க் சமாச்சாரங்களுக்கு பிரசித்தம்)சென்று பஜர் (அதிகாலை நேர தொழுகை) தொழுது விட்டு ஜியாரத் (புனிதமான இடங்களை சந்திப்பது) செய்து விட்டு திரும்பும் வழியில் ஒரு வீட்டு வாசலில் நண்பர் இருக்கவே அவரிடம் சலாம் சொல்லி பேசியிருக்கிறார். அந்த வீட்டுக்குறிய நண்பர் 'வூட்டுக்கு வந்துட்டு போங்க' என்று வற்புறுத்தவே உள்ளே சென்று இருக்கிறார். பச்சை குழந்தை அழும் சத்தம் கேட்டு இருக்கிறது, சாபு உடனே, 'யார்ர கொழந்த?' என்று கேட்டிருக்கிறார், அதற்கு அவர், 'தங்கச்சி கொழந்த சாபு' என்று சொல்ல 'எத்தனை மாசம்?' என்று எதார்த்தமாக கேட்டு வைக்க அவர், 'பத்து மாசம் இருக்குமே..' என்று பதிலளித்திருக்கிறார். அதன் பிறகு சிறிது பேசி விட்டு 'அப்ப வர்ரேன்' என்று விடைபெற்ற அந்த சாபு தெரு முனை வரைக்கும போய் விட்டார் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த அவர் (அதான் அந்த வீட்டிற்குறிய நண்பர் என்று எழுதியிருந்தேன்ல அவரே தான்), 'சாபு, சாபு' என்று கைதட்டி கத

உண்டியல்

கப்ருகள் இல்லாத தர்காக்களை கூட பார்க்கலாம், ஆனால் உண்டியல் இல்லாத தர்காக்களை மட்டும் பார்க்கவே முடியாது. உண்டியல் மட்டும் இல்லை என்றால் இன்னும் பல பேர்கள் வஹ்ஹாபிகளாக (தர்கா மறுப்பாளர்கள்) மாறியிருக்க கூடும். இந்த உண்டியல் எல்லோர் மனதிலேயும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு ஹஜ் பயணாளி ஒரு பெண்மணியிடம், 'நான் ஹஜ்ஜுக்கு போறேன், துவா செய்ங்க' என்று சொன்னதற்கு, அந்த பெண்மணி, 'தம்பி, உண்டியல்ல இந்த காச போட்டுடுங்க' என்று சொல்லியிருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

முதல் இரவு கலாட்டா

சொர்க்கமே என்றாலும் அது நாகூர போல வருமா? - எங்க ஊருக்குள்ள சாக்கடையும் இருக்கு சந்தனமும் இருக்கு. சாக்கடையில் ஒன்றாக மத சண்டைகளை சொல்லலாம். இது சாக்கடை பற்றிய பதிவல்ல என்பதால் சந்தனத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது அநாயசமாக ஒவ்வொருத்தர் வாயிலிருந்து வரும் நகைச்சுவையை சொல்லலாம். அதுவும் பெண்கள் பேசும் பேச்சுக்கள் இருக்கே. சொல்லவே வேண்டாம் ஏனென்றால் சிரிக்கவே நேரம் சரியா இருக்கும். வெளியூரிலிருந்து எங்க ஊரு பெண்ணை கல்யாணம் ஒருத்தர் கல்யாணம் பண்ணினார். ஊர் கார மாப்பிளையையே கலாய்க்கும் பெண்மணிகள் வெளியூரிலிருந்து வந்த அவரை சும்மா விடுவார்களா? இத்தனைக்கு அவர் பயந்த சுபாவம் வேற. கல்யாணம் எல்லாம் நல்லபடியாக முடிந்து அறைக்குள் கையழைத்து விட்ட பிறகு ஒரு நகைச்சுவை உணர்வு மிக்க பெண்மணி அவர்கள் மாப்பிளையை பார்த்து, 'இந்தாரும் தம்பி, கட்டில்ல ஒரு ஓரமா ஒக்காந்து இக்கணும், இந்த எடத்தை வுட்டு அசைய கூடாது, ஆமா' என்று சொல்லி விட்டார். கொஞ்சம் நேரம் கழித்து தட்டி திறந்த போது, மாப்பிள்ளை கட்டிலில் அந்த ஓரத்தில் உட்கார்ந்து கொண்டே, 'இந்த பாருங்க லாத்தா, நீங்க சொன்ன மாதிரி நவரவே இல்லை, வேணும