பள்ளிகூடத்தில்..

பசுமை நிறைந்த பள்ளி பருவங்களை மறக்கத் தான் முடியுமோ?, எங்க ஊரில் பள்ளிகூடத்தில் நடந்த சில கலாட்டாக்கள்...

எங்க ஊரு ஆசாமி ஒருவர் (நாந்தான்னு நினைக்கிறேன்) தொப்பி (அதாங்க முஸ்லிம்கள் தொழுகையின் போது அணியும் குல்லா என்றால் விளங்கும் தானே - (அல்லாஹ்வே! தொழுகையின் போது குல்லா அணிய தேவை இல்லை என்று யாராவது ஒரு சகோதரர் ஹதீதை கொண்டு வராமல் இருக்க வேண்டுமே!) - )அணிந்து கொண்டு பள்ளிகூடத்திற்கு போய் விட்டார்,

ஒரு மாற்று மத சகோதரர், 'நீங்க இப்படி தொப்பி போட்டுட்டு ஸ்கூலுக்கு வர்ரீங்களே?, இப்படி வரக்கூடாது.. இது மத உணர்வை ஏற்படுத்துது" என்று மிகுந்த நல்லெண்ணத்துடன் சொல்லி வைக்க,

நம்ம ஊர் ஆசாமி, "அப்ப நீங்க ஏன் திருநீறு பூசிட்டு வர்ரீங்க.. இது மத உணர்வை ஏற்படுத்தாம மத நல்லிணகத்தையா ஏற்படுத்துது..?" என்று ஒரு போடு போட்டாரே பாருங்கள்..

அந்த சகோதரர் கேட்ட அடுத்த கேள்வி என்னான்னு நினைக்கிறீங்க, "இந்த குல்லா எங்க வாங்குனீங்க, நல்லா இருக்கு.."

------------------------------------------------------------------------

ஆண்டவர் தியேட்டரில் ஒரு படம் மாற்றினால் அந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற கடமை உணர்வு வந்து விடும் எங்க ஊரு படிக்கிற பசங்களுக்கு,
அப்படி ஒரு தடவை ஸ்கூலுக்கு கட் அடித்து விட்டு படத்திற்கு போய் டிக்கெட் கிடைக்காமல் பூவா தலையா போட்டு பார்த்து கடற்கறைக்கு போவது என்ற தலை விழாததாலும் பள்ளிகூடமே போவது என்ற பூ விழுந்ததாலும் பசங்க சிங்க பாதையில் நடக்காமல் பூ பாதையில் பள்ளிகூடத்திற்கே திரும்பினர்,

காலம் தாழ்த்தி வந்து நிற்கும் பால் வடிகின்ற முகத்தை பார்த்து வாத்தியார், 'ஏண்டா லேட், எங்கே போனீங்க?' என்று கேட்டதற்கு

'சார், மாமியா வூட்டுக்கு போனோம், வூடு பூட்டியிருந்துச்சு அதான் லேட்" என்றதும்

தன்னை கூப்பிடாமல் விட்டுட்டு போன கோபத்தில் வகுப்பிலேயே இருந்த உயிர் தோழன் ஒருவன், 'சார் அவன் உங்கள வெடைக்கிறான் சார்" என்றதும் வாத்தியாருக்கு கோபம் தலைக்கேறி பிரம்பை தேட, பசங்க ஜூட், இந்த முறை உண்மையிலேயே மாமியார் வீட்டிற்கு..

---------------------------------------------------------------------------

வெள்ளிகிழமை ஜீம்மா தொழுகைக்கு போக வேண்டும் கொஞ்சமே கொஞ்சம் முன்னதாக சாப்பாடு நேரம் விட்டு விட வேண்டும் என்று பள்ளிக்கு போகாமல் அறப் போரில் (?) ஈடுபட்டது மாணவர் கூட்டம்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தில் அமைதியாகவும் புத்தகங்களை பவ்யமாகவும் வைத்துக் கொண்டு நின்றிருந்த ஒரு மாணவனிடம் ஒரு வாத்தியார், "ஓய்..! நீம்பர் சொல்லுங்கணி, ஜூம்மா முக்கியமா? படிப்பு முக்கியமா?" என்ற கேட்டவுடன்

அந்த புத்தக புழு இப்படி சொல்லியிருக்கிறது, "ஓய்..! ஜீம்மா தாங்கணி முக்கியம்" என்று

(என்னத்த பேசுறது..? - இது நான்)

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்