கல்யாண கலாட்டா

ஒரு விபரமும் தெரியாதவர்களை எங்க ஊரில் "பேயன்" என்று மரியாதையாக (?) அழைப்பது வழக்கம். அப்படி ஒருவர் தனக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாகவும் எப்படி எப்படி நடந்துக்கணும் என்றும் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு குரூப்பிடம் தெரிவித்திருக்கிறார்.

அந்த கொடுமைக்காரர்கள், 'ஓய் ரொம்ப முக்கியம், கையழைச்சு வுட்டவொடனே, பொண்ணுட கைய புடிச்சிட்டு நல்ல சத்தமா மூணாம் கலிமாவ மூணு தடவ ஓதணும்.., அப்புறம் தாலி கட்டு அது இதுன்னு எல்லாம் முடிஞ்சு அறைக்குள்ள பொண்ணு வந்தவொடனே.." என்று நிறுத்தியிருக்கிறார்

"சொல்லுங்கணி, பயமா இருக்கு" என்று திட்டுகட்டு போய் கேட்டிருக்கிறார் அந்த மரியாதைக்குறியவர்

"அட போங்கணி, இப்ப அஞ்சாம் கலிமாவ அஞ்சு தடவ ஓதணும்.." என்று கூறியிருக்கிறார்

"அல்லாஹ்வே.. நான் என்னா செய்வேன், இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது" என்று புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்

"ஏன்?" என்று ஆச்சர்யப்பட்டு கேட்க

"எனக்கு மூணாம் கலிமாவும் தெரியாது, அஞ்சாம் கலிமாவும் தெரியாது, கலிமா தெரியலைன்னா கல்யாணம் பண்ண முடியாதுன்னு (இதையே தலைப்பா வச்சிருக்கலாம்) இப்ப தான் தெரியும்" என்று சொல்லி மூணாம் கலிமாவும் அஞ்சாம் கலிமாவும் மனப்பாடம் செஞ்சு எல்லார்ட்டயும் சொல்லி காண்பித்து இருக்கிறார்.

பாருங்க ஒரு ஆள் கலிமாவ மனப்பாடம் செய்ய வைக்க என்னென்ன பொய் சொல்ல வேண்டியிருக்குது.

கல்யாணத்துக்கு முதல் நாள் அந்த கொடுமைக்கார குரூப்பிடம், "ஏங்கணி எடைல ஏதாவது உட்டுட்டா பிரச்சினை வந்துடாதுல்ல.." என்று கேட்டிருக்கிறார்
(இதில் ரெட்டை அர்த்தம் கண்டுபிடிப்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்)

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்