நாகூர் அம்ஜத்கான்

விக்ரம் படம் நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் ஓடிய போது அம்ஜத் கான் அறிமுகமான காட்சியில் இஹ பேரை சொல்லி தான் தியேட்டர்ல கத்துனான்வோ.

இஹ என்று நான் குறிப்பிட்டிருக்கும் அந்த நபர் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும், இ(ஹ)வர்கள் பள்ளிவாசலில் பயான் செய்யும் போது ஒரு சம்பவம் நடந்தது. பொதுவாக இன்னைக்கு பயான்ங்குறது நரகத்த சொல்லி பயமுறுத்துறது இல்லைன்னா சொர்க்கத்துக்கு ஆசை காட்டறது இந்த நிலையோட நின்று விடுகிறது.

அப்படி தான் ஒரு முறை ஆவேசமாக, 'தொழுவுனீங்க.. உங்கள "வாங்க வாங்க"ன்னு சொல்லி சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போவாங்க, தொழுவல.. உங்கள "தர தர"ன்னு நரகத்துக்கு இழுத்துட்டு போவாங்க" என்று எச்சரித்ததும்,

"அப்ப எங்களுக்குல்லாம் "வாங்க வாங்க"வா? இல்ல "தர தர"வா" ண்டு ஒருத்தர் குழப்பத்தோடு கேட்க

கோபத்துல நாகூர் அம்ஜத்கான் "தூ"ன்னு காரி துப்பிட்டாஹலாம்

அஹலுக்கு "வாங்க வாங்க" கிடைக்கணும்னு இந்த நேரத்துல நான் துவா செஞ்சுக்கிறேன்.

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்