சோடா கலர்

கல்யாணம், காது குத்து, சுன்னத் என்றால் அதை வீடியோ எடுப்பார்கள். பொதுவாக எங்கள் ஊரில் எல்லா வீட்டு விசேஷங்களுக்கும் நாகூர் சேத்தான் அவர்கள் தான் வீடியோ பதிவு செய்வார்கள். அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் அவர் பதிவு செய்த காட்சிகள் மட்டுமல்ல சில நகைச்சுவைகளும் நம்மிடையே உள்ளது.

அவர்கள் ஒரு முறை நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது இடைவேளையில் ஒருவர் 'சோடா கலர், சோடா கலர்.." என்று திரும்ப திரும்ப கூறி விற்று கொண்டு வந்தார்.

சேத்தான் நானா அவரை கூப்பிட்டார்கள், 'என்னா நானா?" என்று அவரும் வந்திருக்கிறார்.

சேத்தான் நானா, "சோடா கலர் இல்லை தம்பி அது வெள்ளை" என்று சொல்லியிருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்