கேள்வியும் பதிலும்

எங்க ஊர்லங்க, ஒழுங்கா பள்ளிவாசலுக்கு தொழுவ போறவன் கூட தப்லீக் ஜமாத் பள்ளிவாசலுக்கு வந்துட்டாஹன்னா, அந்த பள்ளி பக்கமே போவ மாட்டாங்க, என்ன செய்றது?, காலம் அப்படி இருக்கு! இந்த பதிவு தப்லீக் ஜமாத் செய்வது சரியா? தவறா? என்று போலீஸ், வக்கீல் மாதிரி ஆதாரத்தை எடுத்து வைத்து பேசும் பதிவு அல்ல.
இந்த பதிவு தப்லீக் ஜமாத்தார்கள் எங்க ஊர்வாசிகளை தொழுகைக்கு அழைத்த போது அவர்களுக்கு கிடைத்த பதில்கள் பற்றியது.
-----------------------------------------------------------------
"பள்ளிவாசலுக்கு வாங்க.."

"என்ன இப்படி சொல்லிட்டீங்க, நான் தான் கண்டிப்பா வருவேனே"

"எப்போ?""

"பெருநாக்கு (ஹி.. ஹி..)"
------------------------------------------------------------------
"பள்ளிவாசலுக்கு வாங்க"

"பார்க்கறேன்"

"அப்படி சொல்ல கூடாதுங்க, நம்ம மௌத் எப்பன்னு நமக்கு தெரியுமா?"

(பதில் சொன்னவர் இப்போது ஹயாத்தோடு இல்லை) "அது எப்டிங்க தெரியும், அது தெரிஞ்சா தான் அவனவன் தன்னையே "அல்லாஹ்"ண்டுடுவானே"

"அஸ்தக்பிருல்லாஹ்...!"
--------------------------------------------------------------------------

"ஏன் மக்ரிபுக்கு வரலே?"

"நீங்க அஸருக்கு வந்து கூட்டிட்டு போனீங்களா?, அத மாதிரி மக்ரிபுக்கும் வருவீங்கன்னு வீட்ல தான் காத்துகிட்டிருந்தேன், ஆமா ஏன் வரல..?"

பதில் இல்லை
--------------------------------------------------------------------------
"தொழுகைக்கு வாங்க"

"உங்களுக்கு எந்த ஊரு?"

".." ஊர் பேர் சொல்லப்படுகிறது

"உங்க ஊர்ல ஒவ்வொரு வக்துக்கும் வீடு வீடா போய் கூப்பிடுவீங்க்களா..?, எங்க ஊர்ல எல்லாம் பாங்கு சொல்வாஹா..!"

"..."
----------------------------------------------------------------------------

இப்ப சொல்லுங்க, எங்க ஊர்ல எல்லாரும் நல்ல மரியாதை தெரிஞ்சவங்க தானே?

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்