நண்பரின் கோபம்

நாகூர் நண்பர் ஒருவர் சிங்கையில் நிரந்தரவாச விசா (PR - Permanent Resident) வைத்திருந்தார். அப்போது அவர் மனைவியை சிங்கையில் சாதாரண விசாவில் (tourist visa) அழைத்து வந்திருந்தார். குறிப்பிட்ட நாள் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது. மனைவியை நிரந்தரமாக சிங்கையில் தங்க வைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தார்.

அப்போதெல்லாம், விசா வாங்குவது மிக மிக கடினம், சிங்கப்பூர் குடிநுழைவு துறை அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. கடும் வருத்தத்திலும், கோபத்திலும் என்னை சந்தித்த அவரை தேற்றினேன்.

அந்த கட்டத்தில் எனது இன்னொரு நண்பர் அந்த இடத்திற்கு வந்தார். வந்த நண்பரிடம் இந்த நண்பரை அறிமுகப்படுத்தினேன்.

வந்த நண்பர் கேட்ட முதல் கேள்வியே இது தான், "familyயோட இருக்கீங்களா..?"

மனைவியின் விசா கிடைக்காமல் கோபத்தில் இருந்த நண்பர் இப்படி பதில் சொன்னார், "இல்ல பே முழியோட இருக்கிறோம்.." என்று

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்