ரெக்கார்ட் நோட் காணாமல் போனதற்கு கற்பிக்கப்பட்ட நியாயங்கள்

நாகூர் ஆண்டவர் தியேட்டரில் விக்ரம் படம் எடுத்திருந்தார்கள். பள்ளிகூடத்திற்கு போகாமல் படத்திற்கு போன ஒரு பிள்ளையாண்டான் ரெக்கார்ட் நோட்டை தொலைத்து விட்டான்.

அடுத்த நாள் ரெக்கார்ட் நோட்டை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும், அப்போது தான் அவனுக்கே தெரிந்தது, ரெக்கார்ட் நோட் காணாமல் போய் விட்டது என்று. கொஞ்சம் கூட பதட்டப்ப்டவில்லை. "நேத்து பட கொட்டாய்ல (ஒழுங்காக படிக்கவும் - சினிமா கொட்டகையை தான் பிள்ளையாண்டான் இந்த அழகுல சொல்றான்) தான் காணா போயிருக்கும்னு நெனைக்கிறேன்" என்று அலட்சியமாக கூறினான்

வாத்தியார் வந்தார். எல்லோரையும் சமர்ப்பிக்க சொன்னார், எல்லோரும் எழுந்து போய் வாத்தியாரின் மேசையில் வைத்து விட்டு வந்தார்கள்,

"யார் இன்னும் வக்கல..?" என்று கேட்டார்,

நம்ம பய எழுந்து, "நான் வக்கல சார்" என்றான்

"ஏன் வக்கல..?"

"காணா போய்டுச்சு சார்.." என்றான்

"ஏண்டா காணாடிச்சே?" என்று கேட்டார்

அதற்கு, "அதுக்கு என்னா சார் செய்றது, விக்ரம் படத்துல இந்தியாட ராக்கெட்டே காணா போயிடுச்சு" என்று நியாயம் பேசினான்

அவன் சொல்றதும் நியாயம் தானுங்களே..! நீங்க என்னா நெனைக்கிறீங்க..?

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்